search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மம்தா பானர்ஜி"

    • நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள்.
    • திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன.

    கொல்கத்தா:

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் வடக்கு மால்டாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    இந்தியாவின் வளர்ச்சிக்கு மேற்கு வங்காளம் ஒரு காலத்தில் உந்துதலாக இருந்தது. சமூக சீர்திருத்தங்கள், அறிவியல், தத்துவ, ஆன்மிக முன்னேற்றங்கள் மற்றும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தாலும் கூட முக்கிய பங்காற்றியது. ஆனால் முதலில் இடதுசாரிகளும் பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தின் பெருமையையும், மரியாதையையும் குலைத்து, வளர்ச்சியைக் கூட தடுத்தது.

    திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே நிலவுகிறது. மத்திய அரசு வழங்கிய நிதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த கட்சி செய்த ஊழல்களுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தன. அதே நிலைதான் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அவர்களுக்கு காத்திருக்கிறது.

    நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள். இந்திய கூட்டணி 370-வது பிரிவை ரத்து செய்ய விரும்புகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் சொல்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் பல பயனாளிகளில் தலித்துகளும் அடங்குவர். இந்திய கூட்டணி உங்களது சொத்துக்களை கொள்ளையடிக்க பார்க்கிறது.

    ஏழை மக்களின் சொத்துக்கள் அனைத்தையும் விசாரிக்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து எக்ஸ்ரே மிஷின் கொண்டு வந்து, நாட்டில் உள்ள அனைவருக்கும் எக்ஸ்ரே எடுப்பார்கள், நகை, சொத்து உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி, அதில் ஒரு பகுதியை தங்கள் வாக்கு வங்கிக்கு கொடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காத்து ஆதரவளிக்கிறது.

    வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு உங்களது நிலங்களை கொடுத்து அவர்களை இங்கு திரிணாமுல் காங்கிரஸ் குடியமர்த்துகிறது. இந்த வாக்கு வங்கிக்கு உங்கள் சொத்துக்களை கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. நீங்கள் உயிருடன் இருக்கும்போதும், இறந்த பிறகும் கூட காங்கிரஸ் உங்களை கொள்ளையடிக்கும்.

    திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன. ஆனால் உண்மையில் இந்த இரு கட்சிகளின் குணமும் சித்தாந்தமும் ஒன்றுதான். திருப்திப்படுத்துவது அந்த கட்சிகள் இடையே பொதுவான விஷயம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது. இருப்பினும், 7 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
    • ராஜ்நாத்சிங்கோ அல்லது நிதின் கட்காரியோ பிரதமர் ஆகியிருக்கலாம்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் போல்பூர் பாராளுமன்ற தொகுதியில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது. இருப்பினும், 7 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    முன்பெல்லாம் மே 2 அல்லது 3-ந்தேதியுடன் தேர்தல் பணிகள் முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கடுமையான வெயிலுக்கிடையே 3 மாதங்களாக இழுக்கின்றனர்.

    பா.ஜனதாவை திருப்திப்படுத்தவே தேர்தல் கமிஷன் 3 மாத காலத்துக்கு 7 கட்டமாக தேர்தலை ஏற்பாடு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    துர்காபூர்-பர்தாமன் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

    அவர் தற்போது மோடியின் கருணையால் வாழ்ந்து வருகிறார். தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள மோடிக்கு தினமும் வணக்கம் வைக்கிறார்.

    ராஜ்நாத்சிங்கோ அல்லது நிதின் கட்காரியோ பிரதமர் ஆகியிருக்கலாம். அப்படியென்றால் பிரச்சனை இருக்காது. கொஞ்சமாவது மரியாதை தெரிந்த ஒரு ஜென்டில்மேன் பிரதமர் பதவியில் இருக்கும் திருப்தி கிடைக்கும்.

    ராஜ்நாத்சிங்குக்கு மரியாதையுடன் சொல்லிக் கொள்கிறேன். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதை எதிர்ப்போம். நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்று பார்த்து விடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மம்தா பானர்ஜி மீது உங்களுக்கு வெறுப்பு இருந்தால் என்னை கொன்றுவிடுங்கள்.
    • நீங்கள் அபிஷேக் பானர்ஜியைக் கொல்லத் திட்டமிட்டீர்கள்.

    மும்பை தாக்குதல் (26/11) சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டேவிட் ஹெட்லியை சந்தித்ததாக கூறப்படும் மும்பை சேர்ந்த ஒருவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜின் வீடு மற்றும் அலுவலகத்தை நோட்டமிட்ட நிலையில் கைது செய்துள்ளது.

    இந்த நிலையில்தான் தங்களுக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்ய அல்லது ஜெயிலில் அடைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா தலைவர் ஒருவர் வெடிகுண்டு வெடிப்பேன் எனச் சொல்கிறார். மம்தா பானர்ஜி மீது உங்களுக்கு வெறுப்பு இருந்தால் என்னை கொன்றுவிடுங்கள். நீங்கள் அபிஷேக் பானர்ஜியைக் கொல்லத் திட்டமிட்டீர்கள், அவர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பே நாங்கள் அந்த நபரைப் பிடித்தோம்.

    கைது செய்யப்பட்ட நபர் அபிஷேக்கின் வீட்டை நோட்டமிட்டுள்ளார். பேஸ்டைம் (Facetime App) மூலமாக அபிஷேக்கை அழைத்து சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அபிஷேக் குற்றவாளிக்கு சந்திக்க நேரம் வழங்கியிருந்தால், அபிஷேக்கை அந்த குற்றவாளி கொலை செய்திருக்க முடியும்.

    பா.ஜனதா அவர்களுக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்ய அல்லது சிறையில் அடைக்க விரும்புகிறது. அவர்கள் சிலரை உலகில் இருந்து அனுப்ப விரும்புகிறது. நீங்கள்தான் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்றால், மக்களை மிரட்ட வேண்டிய அவசியம் என்ன.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • வரலாற்றில் முதல் முறையாக இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது.
    • 2024-ல் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வரும்.

    முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., தலைவருமான வீரப்ப மொய்லி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வலுப்பெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது.

    மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை தவிர, இந்த முறை அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

    இம்முறை கூட்டணியில் சேர மாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் பின்னர் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

    பாஜக-என்.டி.ஏ-வுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட இந்த வகையான உறுதியான உறுதிப்பாடு இருந்தால், 2024-ல் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
    • அவர்கள் வாக்களிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றார் மம்தா பானர்ஜி.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் பா.ஜ.க.வின் ரகசிய பங்காளிகள்.

    மாநில போலீசாரை முற்றிலுமாக நிராகரித்து நீங்கள் எப்படி தேர்தலை நடத்த முடியும்?

    மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடாது என்பதற்காக இது ஒரு சூழ்ச்சியா?

    மத்திய அரசு திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

    இருசக்கர வாகனம் வைத்திருப்பவர் கூட அதன் பலனைப் பெறமுடியாது.

    ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது.

    நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் அவர்கள் (பா.ஜ.க) உங்கள் ஆதார் அட்டையையும், குடியுரிமையையும் பறிப்பார்கள். நான் விடமாட்டேன் என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது.
    • இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. முழு நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றியுள்ளது என்று குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் சிஏஏ மற்றும் என்ஆர்சி ரத்து செய்யப்படும். அனைத்து பாரபட்சமான சட்டங்களையும் ரத்து செய்வோம்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது. என் வாழ்நாளில் இவ்வளவு ஆபத்தான தேர்தலை பார்த்ததில்லை. தனது கட்சி அனைத்து மதங்களையும் நேசிக்கிறது. மக்கள் மத அடிப்படையில் பிளவுபடுவதை விரும்பவில்லை.

    அசாம் மாநில 2026 சட்டசபை தேர்தலில் தனது கட்சி 126 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை. நான் மீண்டும் வருவேன் என்று கூறினார்.

    • ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டி விசாரணை நடத்துவதற்காக பா.ஜனதா 300 மத்திய குழுவை மேற்கு வங்காள மாநிலத்திற்கு அனுப்பியது.
    • ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இதற்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.

    ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொய்னாகுரியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டி விசாரணை நடத்துவதற்காக பா.ஜனதா 300 மத்திய குழுவை மேற்கு வங்காள மாநிலத்திற்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி என்ன ஆனது என்பது குறித்து மக்களுக்கு பிரதமர் மோடி தற்போது பதில் சொல்லியாக வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் வேலைப்பார்த்த ஏழை மக்கள் இன்னும் சம்பளம் பெறவில்லை.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என பிரதமர் மோடி கூறுகிறார். அவர் முதலில கண்ணாடியைபார்க்க வேண்டும். அவரது கட்சி ஊழலால் நிறைந்துள்ளது.

    பா.ஜனதா பெங்கால் எதிர்ப்பு கட்சி. பா.ஜனதா என்ஆர்சி போர்வையில் பழங்குடியினர், தலித்கள் மற்றும் ஓபிசி-களை வெறியேற்ற திட்டமிட்டுள்ளது. என்ஆர்சி-ஐ நாங்கள் பெங்காலில் அனுமதிக்க மாட்டோம்.

    பெங்காலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டும் பா.ஜனதாவை எதிர்த்து வருகிறது. ஆனால், இரண்டு எதிர்க்கட்சிகள் அவற்றுடன் பணியாற்றி வருகிறது. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ளோம். ஆனால், நாட்டை காப்பாற்ற பெங்காலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் போராட்டம் பாஜகவுக்கு எதிரானது.
    • தயவு செய்து வேறு எந்த கட்சிக்கும் வாக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் சிஏஏ, என்ஆர்சி மற்றும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்வில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் அவரது மருமகனுமான அபிஷேக் பானர்ஜியும் அவருடன் ஈத் விழாவில் கலந்துகொண்டார்.

    ரம்ஜான் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    குடியுரிமை (திருத்தம்) சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றை நாங்கள் ஏற்க மாட்டோம். நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால், யாரும் எங்களுக்கு தீங்கு விளைவிக்க முடியாது.

    தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் போராட்டம் பாஜகவுக்கு எதிரானது.

    இந்தியா கூட்டணி பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம். ஆனால் வங்காளத்தில், தயவு செய்து வேறு எந்த கட்சிக்கும் வாக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் 30 இடங்களுக்கு மேல் பிடிப்போம். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு நாங்கள் ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம்.
    • காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மேற்கு வங்காளத்தில் உள்ள தக்சின் தினாஜ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி ஊடுருவலை தடுக்கமாட்டார். ஏனென்றால் ஊடுருபவர்கள் மம்தா பானர்ஜியின் வாக்கு வங்கி. பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவல் ஊடுருவலை தடுக்க முடியும். நாங்கள் அசாம் மாநிலத்தில் ஊடுருவலை தடுத்து நிறுத்தினோம். நாங்கள் 30 இடங்களுக்கு மேல் பிடிப்போம். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு நாங்கள் ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம். பிரதமர் மோடியின் இந்த வாக்குறுதியை கூறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

    ஏப்ரல் 17-ந்தேதி ராம் நவமி. கடவுள் ராமர் பிறந்த தினம். ஐந்து வருடத்திற்குள் ராமர் கோவில் விசயத்தை பிரதமர் மோடி முடித்து வைத்தார். பூமி பூஜை நடத்தப்பட்டு கோவில் கட்டப்பட்டது. 500 வருடத்திற்குப் பிறகு கடவுள் ராமர் அவரது பிறந்த இடத்தில் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். ராம நவமி அவரது பிரமாண்ட வீட்டிற்குள் நடைபெற இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முஸ்லிம் தனிச்சட்டம் கொண்டு வரப்படும், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது எனச் சொல்கிறார்கள். அவர்களுடைய தேர்தல் பிரசாரத்தில் தாய்லாந்தின் போட்டோ இடம் பிடித்துள்ளது. ஏனென்றால், ராகுல் பாகா தொடர்ச்சியாக விடுமுறைக்காக அங்கே செல்கிறார்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • என்ஐஏ அதிகாரிகள் ஏன் நள்ளிரவில் சோதனை நடத்தினார்கள்?
    • பா.ஜனதா என்ன நினைக்கிறது?. அவர்கள் ஒவ்வொரு பூத் ஏஜென்டையும் கைது செய்ய விரும்புகிறார்களா?

    மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பூபதிநகர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வழக்கை என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. என்ஐஏ குழு இன்று காலை சோதனை நடத்தியபோது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.

    இதில் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். இருந்தபோதிலும் பாலை சரண் மெய்தி மற்றும் மனோப்ரதா ஜனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்து இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, உள்ளூர் மக்கள் அவர்களை தாக்க தொடங்கினர். உள்ளூர் காவல் நிலையத்தில் என்ஐஏ புகார் அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் என்ஐஏ பா.ஜனதாவுக்காக வேலை செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    என்ஐஏ அதிகாரிகள் ஏன் நள்ளிரவில் சோதனை நடத்தினார்கள்? அவர்களுக்கு போலீஸ் அனுமதி கொடுத்தது யார்? நள்ளிரவில் வேறு யாராவது அந்த இடத்திற்குச் சென்றிருந்தால், உள்ளூர்வாசிகள் எப்படி கையாண்டு இருப்பார்கள். தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் ஏன் கைது செய்தார்கள்?.

    பா.ஜனதா என்ன நினைக்கிறது?. அவர்கள் ஒவ்வொரு பூத் ஏஜென்டையும் கைது செய்ய விரும்புகிறார்களா? என்ஐஏ-யின் உரிமை என்ன? பா.ஜனதாவுக்கு ஆதரவாக அனைத்தையும் செய்து வருகிறது. இந்த பா.ஜனதாவின் மோசமான அரசியலுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராட வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

    இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய ஏஜென்சிகளான என்ஐஏ, சிபிஐ, ஐடி என எத்தனை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்?
    • சிபிஐ, ஐடி, ஈடி போன்ற விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் நடந்த பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நமது அரசு சிறப்பாக செயல்பட்டது.

    அனைத்து ஏஜென்சிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

    மத்திய ஏஜென்சிகளான என்ஐஏ, சிபிஐ, ஐடி என எத்தனை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்?.

    வங்காளத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் இங்கு இருக்கும்வரை வங்காள மக்களைத் தொடத் துணிய மாட்டார்கள்.

    சிஏஏ தேர்தலுக்கு முன் கொண்டு வரப்பட்டது. உங்கள் பெயரை பதிவு செய்ய சமர்ப்பித்தவுடன் நீங்கள் ஒரு வங்காளதேசியாக அறிவிக்கப்படுவீர்கள்.

    சி.பி.ஐ, வருமான வரித்துறை மற்றும் ஈ.டி போன்ற விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்.

    விசாரணை அமைப்புகள் பா.ஜ.க.வுக்காக செயல்படுவதால் சமநிலையை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவேன்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற விதியை பா.ஜ.க. மட்டும் பின்பற்றுகிறது என தெரிவித்தார்.

    • மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது.
    • வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டம் தொடங்கி, ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது.

    தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஜல்பைகுரி பகுதியில் அமைந்துள்ள டீக்கடைக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சென்றார். அங்கு டீ தயாரித்துக் கொடுத்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

    இதுதொடர்பான புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    ×